05 January 2013

சமாதானத்தின் தேவன்



     ரோம் பேரரசில் யானஸ் என்னும் தெய்வத்திற்கு ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டிருந்தது. ரோம் வீரர்கள் யுத்தத்திற்கு செல்லும் முன்பு இங்கு வந்து வழிபடுவார்கள். காரணம், யானஸ் யுத்தத்தில் வெற்றியை அருளும் தெய்வமாக அங்கே நம்பப்பட்டு வந்தது. இயேசு பிறப்பதற்கு முன்பு, சமாதானத்தின் தூதுவன் வர போகிறான் என்பதை அறிவுறுத்தும் அறிகுறியாகவோ என்னவோ, ரோம் நகரம் பரவலாக அமைதி நிலவியிருந்தது ; யுத்தம் நடைபெறவில்லை. அதனால் யானஸ் ஆலயத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதில்லை ஆலயமும் அடைக்கப்பட்டது. அவ்வாறு அடைக்கப்பட்ட அந்த ஆலயம், பிறகு திறக்கப்படவேயில்லை என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காரணம் இது தான் இயேசு கிறிஸ்து அப்போது சமாதான பிரபுவாய் பூமியில் அவதரித்தார். சமாதான பிரபு நம்மோடு இருக்கும்போது யானஸ் என்னும் யுத்த தெய்வத்திற்கு வேலையே இல்லையே.
    


    நம்முடைய வாழ்கை, குடும்பம், கிராமம் பட்டணம் எங்கும் அமைதியின்றி, சண்டையும் சச்சரவுமாக காணப்படுகிறது. இன்று பெரும்பாலோரின் தனிப்பட்ட வாழ்கையில் மனப்போரட்டம் குழப்பம், ஒற்றுமைஇன்மை, போட்டி, பொறாமைதான் நிலவுகின்றன. இந்த நிலைமைகள் மாரத்தான் "உங்களுக்காக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார், அவருடைய நாமம் சமாதான பிரபு" (ஏசாயா 36: 6) 

    உண்மையான சமாதனம் தேவனிடமிருந்தே வருகிறது என்று டாக்டர் ஸ்டன்லி ஹார்டன் கூறுகிறார். இதை சங் 119: 165ஆம் வசனம் நிருபித்து காட்டுகிறது. சமாதனம் என்னும் வார்த்தை பாதுகாப்பையும் (சங் 4: 8), திருப்தியையும் (ஏசா 26: 3), செழிப்பையும் (சங் 122: 6-7), யுத்தமில்லாத அமைதியையும் (1சாமு 7: 14), குறிக்கும். யூதர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது சாலோம் (சமாதனம்) என்று கூறுவார்கள். 

     "நாம் விசுவாத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால். நம்முடைய கர்த்தராகிய ஏசுகிறிஸ்து  மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5 : 1) என்று வேத வசனம் கூறுகிறது.  





















No comments:

Post a Comment