02 December 2012

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!


     ஒரு சிறந்த ஓவியர் இயேசுவின் கடைசி விருந்து காட்சியை வரைய ஆரம்பித்தார்.12 சீடர்களையும் மிக நேர்த்தியாகவும் தத்ருபமகவும் வரைந்தார். அதிலும் யூதாஸ் முகம் உண்மையிலே கொடுரமாய் காணப்பட்டது. அனால் ஓவியரால் இயேசுவின் முகத்தை மட்டும் தத்ருபமாக வரைய முடியவில்லை. மிகுந்த கவலையோடு சபை பாதிரியாரை சந்தித்து தன் பிரச்சனையை சொன்னார் 
    அதை கேட்டு புன்னகைத்த பாதிரியார் " இந்த படத்தில் யூதாசை வரையும் பொது, உங்கள் சொந்த எதிரியை மனதில் வைத்து வரைந்திருக்கிரிர்கள் என்று நம்புகிறேன். அதனால்தான் யூதாசின் முகம் இத்தனை தத்ருபமாக அமைந்துள்ளது எந்த உள்ளத்தில் பழி வாங்கும் உணர்ச்சி இருக்கிறதோ, அந்த உள்ளத்தால் இயேசு கிறிஸ்துவின் முகத்தை மனக்கண்ணால் கூட காண முடியாது. அகவே உங்கள் எதிரியை மன்னித்து விடுங்கள். அதன் பின் சாந்த சொருபியான இயேசுவை வரைய முயற்சி செய்யுங்கள் அந்த கருணை பொங்கும் முகம் அற்புதமாக உங்கள் விரல்களால் உருவாகும்" என்றார்.

    அப்படியே தன் எதிரியை மானசீகமாக மன்னித்து, மீண்டும் ஓவியர் வரைந்த போது, இயேசு கிறிஸ்துவின் முகம் உயிர் ததும்பும் பேரொலியோடு கருணை பூவாய் பூத்திருந்தது.

    பழைய ஏற்பாட்டு காலத்தில் எபிரேய ஜனங்கள் பழிக்கு பழி வாங்கினார்கள். அனால் இயேசு கிறிஸ்துவோ நம்முடைய விரோதிகளையும் நாம் சிநேகிக்க வேண்டும் என்று ( லுக் 6 : 27 ) கூறுகிறார். ஒருவர் நமக்கு தீமை செய்யாக்கூடாது. " பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதில் செய்வேன் " என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிற படியால் ( உபா 32: 35 ) நீங்கள் பழி வாங்கமால், கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள் ( ரோமர் 12: 19 )  என்று வேதம் கூறுகிறது. நாம் கோபப்படுவோமானால் தேவனின் அன்பு முகத்தை தரிசிக்க இயலாது.

    கலாத்தியர்  5: 23ல் காணப்படும் 'சாந்தம்' என்ற சொல், 'பிராவோடேஸ் ' என்னும் கிரேக்க சொல்லின் தமிழக்கமாகும். இது உள்ளான மனப்பாங்கை குறிக்கிறது.இது மனது, இருதயம் ஆகியவற்றின் நிலையை விளக்குகிறது. "இயேசு கிறிஸ்து சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர் ( மத் 11  : 29 ).  சந்தகுனமுள்ளவர்களுக்கு அவர் கொடுக்கும் வெகுமதி, 1,  திருப்தி! ( சங் 25 :26)
2.  நியாயத்திலே நடத்தப்படுதல்  ( சங் 25 : 9 ) 3.  பூமியை சுதந்தரித்தல்  (மத் 5: 5 )
4. இரட்சிப்பு  ( சங் 76 : 9 ) 5. உதவி  ( சங் 147: 6 ) 6. மகழ்ச்சி ( ஏசாயா 29 : 19 ) 7. ஆசிர்வாதம்  ( கலா 6 : 1 ) 8. பொறுமை ( 2 தீமோ 2: 24-25 ) 9. பரிசுத்த ஆவி ( சங் 5 : 22 ) 10.  அறிவு  ( சங் 25: 9 )

    நாம் அனைவருடனும் சாந்த குணத்துடன் பழக வேண்டும்  ( பிலி  4 : 5 )  என்று தேவன் விரும்புகிறார்.    


No comments:

Post a Comment