பாவ வாழ்க்கையை மாற்றும் பரமபிதா
பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி அநேகர் கடலில் முழ்கி மரணமடைந்திருந்தனர். ஒருவன் எப்படியோ சிரமப்பட்டு நீந்தி ஒரு சிறிய தீவை சென்றடைந்தான். அத் தீவிலுள்ள மக்கள் அவனை மிகுந்த அன்போடு உபசரித்தனர். அத்தீவை சுற்றிபர்த்த அவன், அங்குள்ள மக்கள் இயேசு கிறிஸ்துவை வழிபடுகிறவர்களாக இருப்பதை கண்டான். தான் கடவுள் கடவுள் மறுப்புகாரனாக, நாத்திகனாக இருந்ததால், அவர்களுடைய கடவுள் நம்பிக்கை அவனுக்கு வெருப்புட்டியது. அங்குள்ள மக்களிடம் " உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் அன்பை என்னால் மறக்க இயலாது. அனால் ஒரே ஒரு காரியம் எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் இயேசுவை வழி படுகிறீர்கள் அதை நான் வெறுக்கிறேன்" என்றான்.
உடனே அத்தீவின் தலைவன், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இங்கு வந்தீர்களானால் உங்கள் மீதான எங்கள் பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கும். இறை மீது பாயும் மிருகங்களின் இயல்பையே எங்களிடம் பார்த்திருப்பிர்கள் ஆமாம், நாங்கள் மனிதரை கொன்று தின்னும் நரமாமிச பட்சினிகலகத்தான் பிறந்தோம், வளர்ந்தோம். ஆனால் எங்கள் தீவிற்கு ஒரு ஊழியக்காரர் வந்து தைரியமாக இயேசுவை பற்றி அறிவித்தார். இயேசுவின் அன்பை பரிவுடன் விவரித்தார். நாங்கள் அந்த இயேசுவை ஏற்றுகொண்டோம். அன்று முதல் நாங்கள் மனித மாமிசத்தை புசிக்கும் காட்டு மிரண்டித்தனத்திலிருந்து மாறினோம். நாங்கள் இன்னும் எங்கள் பழைய பாரம்பரியத்தை கைகொண்டவர்களாக இருந்திருந்தால் உங்கள் கதி என்ன என்பதை யோசித்து பாருங்கள் ..." என்று பதிலளித்தார்கள்.
விபத்தில் முழ்கிய கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே நபர் என்ற வகையிலும் அப்படி தப்பிபிழைத்தும் நரமாமிச பட்சினிகளிடம் சிக்காமல், நல்மனதுக்கு மாறிய இந்த நல்லவர்களின் அன்புக்குப் பாத்திரமானதும் இறைவன் அருளாலேயே என்பதை அவன் புரிந்துகொண்டான். இயேசுவின் தியாக அன்பு, அம்மக்களின் பாரம்பரிய கொடூர குணத்தையே மற்றிருப்பதுதான் எவ்வளவு ஆச்சரியம்!
"நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்" ( ௧ கொரி 13 :10 ) என்று வேத வசனம் கூறுகிறது மேலும் " ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான் பழையவை எல்லாம் ஒழிந்து போயின எல்லாம் புதியதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது " ( 1 கொரி 5: 15-16 ) என்ற அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதினார்.
யாருக்குல்ளெல்லாம் நிறைவான தேவனும் வருகிறாரோ, உடனே அவர்களின் பாவ வாழ்கை மாறிப் போகிறது. பாவ வாழ்க்கையை மாற்றும் வல்லமை இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு என்பதை வேதம் தெளிவாய் போதிக்கிறது " தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இறக்கம் பெறுவான் " ( நீதி 28: 13 ) தேவனிடத்தில் இறக்கம் பெறும்போது தேவன் உங்களுக்கு கொடுக்கும் நல் வார்த்தை இதோ " முந்தினவற்றை நினைக்க வேண்டாம் பூர்வமானவற்றைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன். இப்போதே அது தோன்றும் " (எசாயா 43 : 18-19 )