15 September 2012

சாத்தான் எனும் நடிகன்

சாத்தான் எனும் நடிகன்



            சமீபத்தில் ஹாக்னோஷ் என்ற வகைப் பாம்புகளைக் குறித்து ஒரு பத்திரிகையில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த பாம்புகள் மிகவும் தந்திரமானவை. இவற்றுக்கு விஷம் கிடையாது. இந்த பாம்பு நம்மை கடித்தால் ஒன்றும் ஆகாது. ஆனால் இது தன்னை யாரேனும் தாக்க வரும்போது அவர்களிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள படமெடுத்து சீறி எழுந்து கொத்தபோவது போல வீராப்பாய் பாவனை செய்யும். எதிரி பலசாலியாக இருந்து, தான் படமெடுத்தும் வேஷம் போட்டும் பிரயோஜனமில்லை என்று தெரிய வரும்போது, செத்தது போல் அப்படியே அசையமால் கிடக்கும். பாம்பு செத்துவிட்டது என்று நம்பி எதிரிகள் போன பிறகு, திரும்பவும் நகர்ந்து சென்று தப்பித்துக்கொள்ளும்.
 
               இதைப்போலத்தான் சாத்தானும் மிகவும் தந்திரசாலி. மிகப்பெரிய நடிகன். இவனுக்கு எவ்வித அதிகாரமோ, வல்லமையோ இல்லை. காரணம், இவனை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினாலே ஜெயித்து விட்டார். ஆனாலும் இந்த பிசாசானவன் இன்று நம்மை பயமுறுத்தி, அதிக சக்தி வாய்ந்தவனைப் போல, நம்மை வீழ்த்தி விடுவதைப்போல நடித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு பயந்து நாம், தெருத் தெருவாய், ஊர், ஊராய், மந்திரவதிகளையும் பிசாசு விரட்டுபவர்களையும் தேடி நாடிச் செல்கிறோம்.

                 ஆனால், உண்மையில், பிசாசு செத்துப்போன பாம்பு. அவன் தலையை இயேசு கிறிஸ்து நசுக்கி விட்டார். வால் மாத்திரம் கொஞ்சம் அடிகொண்டிருக்கிறது. இந்த பிசாசுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. "திருடன் (பிசாசு) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான்  10: 10). இந்த திருட்டு பிசாசின் (ஆத்துமாவை திருடுகிறவன்) ஆளுகை ஒரு மனிதனுக்குள் முழுவதுமாக இறங்கி வரும்போது அவன் தன்னையும் மறந்து பிசாசின்  கட்டுபாட்டிற்குள் வந்து விடுகிறான். பல லட்சம் பணம் செலவு செய்தாலும் இந்த பிசாசை சுய முயற்சியினால் விரட்ட முடியாது. அப்படியானால் என்ன செய்வது? " தேவனுக்கு கிழ்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் " என்று ( யாக் 4: 7) வேதம் சொல்கிறது.
                
                  நாம் தேவனுக்கு கிழ்படிந்து அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமக்கப்பட்டு விசுவசிகளாகி, இயேசுவின் பெயரை உச்சரித்து பிசாசை எதிர்க்கும்போது, பிசாசு நடுங்குவான். இயேசுவின் பெயரை உச்சரித்தால் நம்மை விட்டு வெகு தூரம் ஓடிப்போய்விடுவான். 

                                                                                                     தினகரன் ஆன்மிக மலர்     



  

08 September 2012

இயேசு என்ற இராணுவ வீரர்




           இஸ்ரவேலருக்கும் எமோரியரின் ராஜாக்களுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் எமோரியரை இஸ்ரவேலரின் கைகளில் ஒப்புக்கொடுத்தர்கள். ஒப்புகொடுக்கும் அந்த நாளில் யோசுவா, கர்த்தரை நோக்கி பேசி, பின்பு அவரது கட்டளையால் சூரிய சந்திரனுக்கும் தத்தம் இடத்தில் தரித்து நிற்கும்படி ஆணையிட்டார். "சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள். உங்கள் ஒளியினால் நாங்கள் எதிராளிகளை கண்டுபிடித்து அவர்களை அழிப்போம்" என்றார். அதன்படியே மக்கள் தங்கள் எதிராளிகளை முற்றிலுமாக முறியடிக்கும் வரையிலும் சூரியன் மறையாமல் நின்றது. சந்திரனும் அப்படியே நின்றது. இந்த சம்பவத்திற்கு பின்பு பகைவர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்து வரவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விட்டார்கள். இப்படியாக கர்த்தர் ஒரு மனிதனுடைய வார்த்தையை கனம் பண்ணி அவனை உயர்த்தினார். அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னும் பின்னும் இல்லை. கர்த்தரே இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணினார் 

           ஒரு மனிதன் தேவனோடு இருக்கும் போது அவனுக்காக அவர் யுத்தம் பண்ணுகிறார். " அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" - (சங் 33 :9)
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைகலமானவர். அவர் பூமியின் கடை முனை மட்டும் யுத்தங்களை ஓயப் பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார். ரதங்களை நெருப்பினால் சுட்டேரிக்கிறார், நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன் - (சங் 46: 7-10)
என்று வேதம் சொல்லுகிறது.
             தேவன் நம்மை இர்ட்சிக்கும்படி மிகவும் பிரியமாய் இருக்கிறார். இரட்சிப்பு என்றால் காப்பற்றப்படுதல் அல்லது விடுவிக்கப்படுதல். நாம் விடுதலை பெரும்படியாக இயேசு கிறிஸ்து சாத்தானோடு யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்த இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்கும் போது, ஏற்றுகொல்லும்போது, நன்முடைய பாவத்தின் அடிமை தனத்திநின்று நம்மை விடுவிப்பார். நோய்கள், போராட்டங்கள், போன்றவற்றிலிருந்து விடுதலையளிக்கிறார். நமக்காக அவர் யுத்தம் செய்து நம்முடைய வாழ்க்கையில் யெகோவா நிசியாக இருந்து வெற்றிக்கொடி பிடிப்பார். "கர்த்தரை தங்களுக்கு தெய்வமாக கொண்ட ஜாதியும் அவர் தமக்குச் சுதந்திரமாக தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது" - (சங் - 33: 12)
நமக்காக பரிந்து பேச, யுத்தம் செய்ய ஒரு நபர் கூட இல்லையே என்று ஏங்கதீர்கள். உங்களுக்காகப் பரிந்து பேச ஒரு வழக்குரைஞர் உண்டு. அவர் தான் இயேசு. உங்களுக்காக யுத்தம் செய்ய ஒரு இராணுவ வீரர் உண்டு. அவர் தான் இயேசு. அகவே மனிதனுக்கு பயப்படமால் கர்த்தருக்கு பயந்திருங்கள்.                                                                                          


                                                                                                 நன்றி - தினகரன் ஆன்மிக மலர்



கர்த்தருடைய நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் சமாதானமும் சந்தோஷமும் உண்டாவதாக.
                                                                                                           <a href='http://www.tamil10.com' target="_blank" rel="dofollow" > <img src='http://www.tamil10.com/files/newlogo.gif' alt=' Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator '><a href='http://www.tamil10.com' target="_blank" rel="dofollow" > <img src='http://www.tamil10.com/files/newlogo.gif' alt=' Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator '>

05 September 2012

தமிழகத்துக்கு பெருமையா?

தமிழகத்துக்கு பெருமையா?


செய்தி 
                   
                    "தமிழகத்துக்கு வந்த இலங்கை பக்தர்கள் விரட்டியடிப்பு மற்றும் கால் பந்து விளையாட வந்த பள்ளி மாணவர்களும் தமிழக அரசால் திருப்பி அனுப்பப்பட்டனர்"


  கோணம் 

                  தஞ்சாவூர், பூண்டி, வேளாங்கண்ணி மாதா கோயில்களில் வழிபட வந்த பக்தர்களை முற்றுகையிட்டு தாக்க முயன்றுள்ளனர். நாங்களும் தமிழர்கள்தான் 15 வருடங்களாக இந்த கோவிலுக்கு வந்து போய் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதை கேட்க ஆத்திரகாரர்கள் தயாரில்லை இலங்கைளிருந்து வரும் அனைவரும் சிங்களர்கள், சிங்களர்கள் அனைவரும் எதிரிகள் என்று அவர்கள் நம்புகிறார்கள் தவறான விபரீதமான அந்த எண்ணம் உருவாக யார் காரணம்? 

                   சென்னை பள்ளி ஒன்றின் அழைப்பின் பேரில் இங்கே வந்து கால்பந்து போட்டியில் பங்கேற்க பயிற்சி செய்து கொண்டிருந்த இலங்கை பள்ளிகூட மாணவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டார். இன்னொரு கொழும்பு கல்லூரியில் இருந்து சென்னை வந்து சுங்க அதிகாரிகள் குழுவுடன் கால்பந்து போட்டியில் களமிறங்கிய குழுவை திருப்பி அனுப்ப உந்தரவிட்டார். நேரு ஸ்டேடியத்தில் அவர்கள் விளையாட அனுமதித்த அதிகாரியை சஸ்பென்ட் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிட்டுளார். எந்த மாநிலமும் பார்த்திராத அதிரடி நடவடிக்கைகள்.

                     அப்பாவி தமிழர்கள் பலியாக காரணமான இலங்கை அரசையும் ராணுவத்தையும் தண்டிக்கும் கோரிக்கையுடன் தொடங்கிய எதிர்ப்பு வேறு திசையில் திரும்பிருக்கிறது. பள்ளி மாணவர்கள், பக்தர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து மக்களையும் எதிரிகளாக பாவித்து, நிராயுதபாணிகளான அவர்களை தாக்கவும் துரத்தி அடிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்த சரியான சந்தர்ப்பம் வந்து விட்டது என்று கட்சி கொடிகளையும் கற்களையும் கைகளிலேந்தி வீதியில் இறங்கிவிட்டார்கள்.

                      இந்தியாவில் நாசவேலைகள் செய்து அப்பாவிகளை பலியாக்கும் பாகிஸ்தான், இந்திய மண்ணில் கணிசமான பகுதியையை ஆக்கிரமித்துள்ள சீனா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்குகூட இத்தகைய வரவேற்பு கொடுப்பதில்லை. அரசின் செயல்களுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. அந்த விஷயத்தில் நம்மை போன்றுதான் இதர நாடுகளும், அதே மாதிரி ஒரு அநீதி இன்னொரு அநீதியை நியாயமாக்கி விடாது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த உண்மைகளை அறிந்து அலட்சியப் படுத்தினால் நமது நாடு பெரிய விலை கொடுக்க நேரிடும். 

                                                                                                                             --  நன்றி: தினகரன் 

என் எண்ணம்  
          
                       வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இன்று விரட்டியடிக்கும் நாடக மாறியிருக்கிறது காரணம் நம் தமிழ்மக்கள் அங்கு சித்திரவதை பட்டுகொண்டிருக்கும் போது அந்த நாட்டை சார்ந்த மக்கள் இங்கு வந்து போவதை நம்மால் தங்கிக்கொள்ள முடியவில்லை. மக்களின் உணர்ச்சி கலந்த நிலையில் பார்க்கும் போது இது சரியாக தோன்றலாம் அனால், மனித நேயத்துடன் பார்க்கும் போது இது தவறான போக்காகும். நம் தமிழ் நாட்டை சார்ந்த எந்தனையோ வியாபாரிகள் அங்கே சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். நம்மை போன்று அவர்களும் நம்மவர்களை தாக்க தொடங்கினால் என்னாவது என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு செல்லும் நம் நாட்டு தலைவர்கள் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமதிக்கப் படுகிறார்கள் அப்போது நாம் கண்டன கணைகளை விட்டு அதோடு மறந்து விடுகிறோம். அந்த நாட்டு மக்களை நாம் எதுவும் செய்யவில்லை, அதேபோல் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்து எட்டு இந்தியர்கள் கொள்ளப்பட்டு விட்ட போதும் அந்த நாட்டுடன் நாம் சண்டை போடமால் கண்டனம் தெரிவித்து விட்டுவிட்டோம். இது போன்ற விஷயங்களில் உணர்ச்சிகளை வெளி காட்டமால்  மனிதபிமனாத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டு சித்திரவதை பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய பாதுகாப்பும் இதில் அடங்கிருக்கிறது. அதலால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து அரசாங்கமும் இது போன்ற செயல்களை உக்குவிக்கமால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்று படுவோம் தமிழீழம் கிடக்க பாடுபடுவோம். 

01 September 2012

பாக்கியம் தரும் பரமனின் பரீட்சை

வழி காட்டும் கிறிஸ்துவம் 




பாக்கியம் தரும் பரமனின் பரீட்சை 

                  ஊத்ஸ் என்ற நாட்டில் யோபு என்னும் ஒரு பெரிய பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பத்து பிள்ளைகள், ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐந்நூறு ஏர்மாடுகள், ஐந்நூறு கழுதைகள், மற்றும் திரளான வேலையாட்கள் இருந்தார்கள். ஆனாலும் அவர் உத்தமனனாய், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். தேவன் அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் பாதுகாத்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோபுவினுடைய வாழ்க்கையில் புயல் காற்று 
வீசியது. காரணம் யார் தெரியுமா? பொறாமையின் எஜெண்டாகிய பிசாசுதான். ஆம், ஒரு நாள் பிசாசு தேவனிடம் வந்து அவனுக்குண்டான எல்லாவற்றையும் அழிக்கும்படி அனுமதி கேட்டான். எப்படிபட்ட சூழ்நிலை வந்தாலும் யோபு தன்னை மறுதலிக்க மாட்டான் என்று தேவன் அறிந்த படியால் சவால் விட்டு அனுமதி வழங்கினார்.

                    உடனே யோபுவின் பிள்ளைகள், ஆடுகள், ஒட்டகங்கள், ஏர் மாடுகள், கழுதைகள், வேலைக்காரர்கள் என அடுத்தடுத்து எல்லாம் அழிந்து போய்விட்டது. யோபு கொஞ்சமும் கலங்கவில்லை. "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லி அவர் புகழ் பாடினான். பின்னும் ஒருநாள் சாத்தான் தேவனிடத்தில் வந்து "நீர் உம்முடைய கையை நீட்டி அவன் எலும்பையும் அவன் மம்சத்தையும் தொடுவீரானால் அவன் உம்மை தூஷிப்பான், குறை சொல்லுவான்" என்றான் தேவனும் "அவன் உயிரை பறிக்க உனக்கு அதிகாரமில்லை: ஆனால் அவன் சரீரத்தை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். அவன் என்னை மறுதலிக்க மாட்டான்" என்று சவால் விட்டார்.
                      உடனே சாத்தான், யோபுவுக்கு உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை வரை கொடிய பருக்கள் கொண்டு வந்தான். யோபு என்ன நடக்கிறது என்று அறியாமல் ஒரு ஓட்டை எடுத்து தன்னை சுரண்டிகொண்டே சாம்பலில் உட்கர்ந்திதிருந்தான். இதை பார்த்த யோபுவின் மனைவி தேவனை தூஷித்து ஜீவனை விடும் படி ஆலோசனை கூறினால்.

                       யோபு தன் மனைவியை பார்த்து "தேவன் கையிலே நன்மையை பெற்ற நாம், தீமையையும் பெற வேண்டாமா?" என்றான். ஒருபுறம் மனைவியின் வார்த்தைகள், இன்னொரு புறம் தன் நண்பர்களின் கேலி பேச்சுகள், இவை மதத்திலும் யோபு தேவனை தூஷிக்கவில்லை. மாறாக தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தார். அப்போது தேவன் யோபுவின் முகத்தை பார்த்தார். அவன் நிலைமையை மாற்றினார். அவனுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாக திருப்பிக் கொடுத்தார். நாலு தலைமுறையாக தன் பிள்ளைகளையும், அவர்களுடைய வம்சவாழியினர் வாழ்வையும் கண்டு பூரண வயது நிரம்பியவானாய் சமாதானத்தோடே நித்திரையடைந்தான் யோபு.

                        சோதனைகள் அதாவது பரீட்ச்சைகள், நம்மை புடம் போடவே, நம்மை உயர்த்தவே இறைவனால் அளிக்கப்படுகின்றன. வாழ்கைப் பரீட்சையில் வெற்றி பெற தேவனை சர்ந்துகொள்வோம். குறை கூறாதிருபோம். இப்படி இருந்தால், நம்மைக் குறித்து தேவன் பிசாசிடம் சவால் விடுவார். 

                                                                                                   "பரமன்குறிச்சி பெவிஸ்டன்"