02 December 2012

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!


     ஒரு சிறந்த ஓவியர் இயேசுவின் கடைசி விருந்து காட்சியை வரைய ஆரம்பித்தார்.12 சீடர்களையும் மிக நேர்த்தியாகவும் தத்ருபமகவும் வரைந்தார். அதிலும் யூதாஸ் முகம் உண்மையிலே கொடுரமாய் காணப்பட்டது. அனால் ஓவியரால் இயேசுவின் முகத்தை மட்டும் தத்ருபமாக வரைய முடியவில்லை. மிகுந்த கவலையோடு சபை பாதிரியாரை சந்தித்து தன் பிரச்சனையை சொன்னார் 
    அதை கேட்டு புன்னகைத்த பாதிரியார் " இந்த படத்தில் யூதாசை வரையும் பொது, உங்கள் சொந்த எதிரியை மனதில் வைத்து வரைந்திருக்கிரிர்கள் என்று நம்புகிறேன். அதனால்தான் யூதாசின் முகம் இத்தனை தத்ருபமாக அமைந்துள்ளது எந்த உள்ளத்தில் பழி வாங்கும் உணர்ச்சி இருக்கிறதோ, அந்த உள்ளத்தால் இயேசு கிறிஸ்துவின் முகத்தை மனக்கண்ணால் கூட காண முடியாது. அகவே உங்கள் எதிரியை மன்னித்து விடுங்கள். அதன் பின் சாந்த சொருபியான இயேசுவை வரைய முயற்சி செய்யுங்கள் அந்த கருணை பொங்கும் முகம் அற்புதமாக உங்கள் விரல்களால் உருவாகும்" என்றார்.

    அப்படியே தன் எதிரியை மானசீகமாக மன்னித்து, மீண்டும் ஓவியர் வரைந்த போது, இயேசு கிறிஸ்துவின் முகம் உயிர் ததும்பும் பேரொலியோடு கருணை பூவாய் பூத்திருந்தது.

    பழைய ஏற்பாட்டு காலத்தில் எபிரேய ஜனங்கள் பழிக்கு பழி வாங்கினார்கள். அனால் இயேசு கிறிஸ்துவோ நம்முடைய விரோதிகளையும் நாம் சிநேகிக்க வேண்டும் என்று ( லுக் 6 : 27 ) கூறுகிறார். ஒருவர் நமக்கு தீமை செய்யாக்கூடாது. " பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதில் செய்வேன் " என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிற படியால் ( உபா 32: 35 ) நீங்கள் பழி வாங்கமால், கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள் ( ரோமர் 12: 19 )  என்று வேதம் கூறுகிறது. நாம் கோபப்படுவோமானால் தேவனின் அன்பு முகத்தை தரிசிக்க இயலாது.

    கலாத்தியர்  5: 23ல் காணப்படும் 'சாந்தம்' என்ற சொல், 'பிராவோடேஸ் ' என்னும் கிரேக்க சொல்லின் தமிழக்கமாகும். இது உள்ளான மனப்பாங்கை குறிக்கிறது.இது மனது, இருதயம் ஆகியவற்றின் நிலையை விளக்குகிறது. "இயேசு கிறிஸ்து சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர் ( மத் 11  : 29 ).  சந்தகுனமுள்ளவர்களுக்கு அவர் கொடுக்கும் வெகுமதி, 1,  திருப்தி! ( சங் 25 :26)
2.  நியாயத்திலே நடத்தப்படுதல்  ( சங் 25 : 9 ) 3.  பூமியை சுதந்தரித்தல்  (மத் 5: 5 )
4. இரட்சிப்பு  ( சங் 76 : 9 ) 5. உதவி  ( சங் 147: 6 ) 6. மகழ்ச்சி ( ஏசாயா 29 : 19 ) 7. ஆசிர்வாதம்  ( கலா 6 : 1 ) 8. பொறுமை ( 2 தீமோ 2: 24-25 ) 9. பரிசுத்த ஆவி ( சங் 5 : 22 ) 10.  அறிவு  ( சங் 25: 9 )

    நாம் அனைவருடனும் சாந்த குணத்துடன் பழக வேண்டும்  ( பிலி  4 : 5 )  என்று தேவன் விரும்புகிறார்.    


18 November 2012

துயரத்திலிருந்து தூக்கி எடுக்கும் தேவன்


          தாவீது என்னும் பக்தன் பலவிதமான துயரங்களின் நடுவே வாழ்திருந்த  போது கர்த்தரிடத்தில் தன் மனவேதனையை தெரிவித்து விண்ணப்பம் செய்கிறான். அந்த விண்ணப்பத்தை 102 வாசிக்கிறோம். அந்த சங்கீதத்தின் ஆறாவது வசனத்தில் அவன் "வனாந்திர நாரைக்கு ஒப்பனேன்"  என்று சொல்லி புலம்புகின்றான். இந்த வனாந்திர நாரை உருவத்தில் பெரியது, 6  அடி நீளமுள்ளது. இறக்கைகள் விரிக்கும் போது 12 அடி வரை இருக்கும். இது வானத்திலும் பறக்கும் தண்ணீரிலும் நீந்தும். நீங்கள்தான் இவற்றின் பிரதான உணவு நாரையின் அலகின் அடியில் பை போன்ற சவ்வு இருக்கும். இதன் வழியாக தண்ணீரை உறிஞ்சி மீன்களை சேகரித்து தன் கூடுகளுக்கு கொண்டு சென்று தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும். தாய் பறவை அதிகமான மீன்களை கொத்திக்கொண்டு வரும். இவை அனைத்தையும் குஞ்சிகளால் புசிக்க முடியாது. புசிக்காத மீதமான மீன்கள் கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடும். கீழே சிதறிய மீன்கள் வெயிலில் காய்ந்து கருவடகப்போயவிடும். பல கூடுகளில் இதுபோன்ற நடை பெறுவதால் அந்த இடமே துர்நாற்றம் வீசும். மனுசர்கள் இந்த துர்நாற்றத்தினால் வனாந்திர நாரையின் கூடுகளுக்கு அருகில்கூட செல்ல மாட்டார்கள்.

             இதை மனதில் கொண்டுதான் தாவீது தன்னை "வனாந்திர நாரைக்கு ஒப்பனேன்" என்று சொல்கிறான். காரணம் தாவீதையும் மற்ற ஜனங்கள் எல்லோரும் வெறுத்தார்கள். ஆறுதல் சொல்ல ஒரு நபர்கூட இல்லை. அந்த நிலையில் அவன் தேவனை நோக்கி பார்த்து விண்ணப்பம் செய்தான். அவன் விண்ணப்பத்தை கேட்டு தாவீதை தேவன் உயர்த்தினார் அவனைத் தேடி பலர் வந்தார்கள். அவன் நறுமணம் வீசுகிரவனாய் மாறினான்.

              இடறு நம்மில் சிலர், பிறரால் ஒதுக்கி வைக்கப்பட்ட சூழ்நிலையில் தனி ஒரு மரமாக நின்று வேதனை பட்டு கொண்டிருக்கலாம். வனாந்திர நாரையை போல, பிறர் நம்மை வெறுத்து தள்ளலாம். இன்று தேவனை நோக்கி விண்ணப்பம் செய்வோம். தாவீதை உயர்த்தினவர் நம்மையும் உயர்த்துவார்
                                                                        

20 October 2012

பாவ வாழ்க்கையை மாற்றும் பரமபிதா

பாவ வாழ்க்கையை மாற்றும் பரமபிதா



          பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி அநேகர் கடலில் முழ்கி மரணமடைந்திருந்தனர். ஒருவன் எப்படியோ சிரமப்பட்டு நீந்தி ஒரு சிறிய தீவை சென்றடைந்தான். அத் தீவிலுள்ள மக்கள் அவனை மிகுந்த அன்போடு உபசரித்தனர். அத்தீவை சுற்றிபர்த்த அவன், அங்குள்ள மக்கள் இயேசு கிறிஸ்துவை வழிபடுகிறவர்களாக இருப்பதை கண்டான். தான் கடவுள் கடவுள் மறுப்புகாரனாக, நாத்திகனாக இருந்ததால், அவர்களுடைய கடவுள் நம்பிக்கை அவனுக்கு வெருப்புட்டியது. அங்குள்ள மக்களிடம் " உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் அன்பை என்னால் மறக்க இயலாது. அனால் ஒரே ஒரு காரியம் எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் இயேசுவை வழி படுகிறீர்கள் அதை நான் வெறுக்கிறேன்" என்றான்.


           உடனே அத்தீவின் தலைவன், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இங்கு  வந்தீர்களானால் உங்கள் மீதான எங்கள் பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கும். இறை மீது பாயும் மிருகங்களின் இயல்பையே எங்களிடம் பார்த்திருப்பிர்கள்   ஆமாம், நாங்கள் மனிதரை கொன்று தின்னும் நரமாமிச பட்சினிகலகத்தான் பிறந்தோம், வளர்ந்தோம். ஆனால் எங்கள் தீவிற்கு ஒரு ஊழியக்காரர் வந்து தைரியமாக இயேசுவை பற்றி அறிவித்தார். இயேசுவின் அன்பை பரிவுடன் விவரித்தார். நாங்கள் அந்த இயேசுவை ஏற்றுகொண்டோம். அன்று முதல் நாங்கள் மனித மாமிசத்தை புசிக்கும் காட்டு மிரண்டித்தனத்திலிருந்து மாறினோம். நாங்கள் இன்னும் எங்கள் பழைய பாரம்பரியத்தை கைகொண்டவர்களாக இருந்திருந்தால் உங்கள் கதி என்ன என்பதை யோசித்து பாருங்கள் ..." என்று பதிலளித்தார்கள்.

                விபத்தில் முழ்கிய கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே நபர் என்ற வகையிலும் அப்படி தப்பிபிழைத்தும் நரமாமிச பட்சினிகளிடம் சிக்காமல், நல்மனதுக்கு மாறிய இந்த நல்லவர்களின் அன்புக்குப் பாத்திரமானதும் இறைவன் அருளாலேயே என்பதை அவன் புரிந்துகொண்டான். இயேசுவின் தியாக அன்பு, அம்மக்களின் பாரம்பரிய கொடூர குணத்தையே மற்றிருப்பதுதான் எவ்வளவு ஆச்சரியம்!

                "நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்" ( ௧ கொரி 13 :10 ) என்று வேத வசனம் கூறுகிறது மேலும் " ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான் பழையவை எல்லாம் ஒழிந்து போயின எல்லாம் புதியதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது " ( 1 கொரி 5: 15-16 ) என்ற அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதினார். 

                 யாருக்குல்ளெல்லாம் நிறைவான தேவனும் வருகிறாரோ, உடனே அவர்களின் பாவ வாழ்கை மாறிப் போகிறது. பாவ வாழ்க்கையை மாற்றும் வல்லமை இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு என்பதை வேதம் தெளிவாய் போதிக்கிறது  " தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இறக்கம் பெறுவான் " ( நீதி 28: 13 ) தேவனிடத்தில் இறக்கம் பெறும்போது தேவன் உங்களுக்கு கொடுக்கும் நல் வார்த்தை இதோ " முந்தினவற்றை நினைக்க வேண்டாம் பூர்வமானவற்றைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன். இப்போதே அது தோன்றும் " (எசாயா 43 : 18-19 )
    

 

13 October 2012

பொறாமை என்னும் பிசாசு

பொறாமை என்னும் பிசாசு 


             கிரேக்க நாட்டில் தியாஜீன்ஸ் என்ற பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரன் இருந்தான். "மல்யுத்த இளவரசர்" என்ற சிறப்புப் பட்டமும் அவனுக்கு கொடுக்கப்பட்டது. இன்னொரு மல்யுத்த வீரனுக்கு தியாஜீன்ஸ் மீது மிகுந்த பொறமை. திடிரென்று ஒருநாள் தியஜீன்ஸ் மரணமடைந்தான். அப்படியுருந்தும் அவன் குறையவில்லை. ஏனெனில் அந்த ஊர் மக்கள், உயிரோட்டமிக்க தியாஜீனஸின் மிகப்பெரிய சிலையை செய்து பொது இடத்தில் வைத்தார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் பொறாமைக்கரனுக்கு மேலும் பற்றி கொண்டு வரும். அகவே ஒவொரு நாளும் இரவு வேளையில் அவனது ஆத்திரம் தீர அந்த சிலையோடு மல்யுத்தம் செய்வான். எதிர்த் தாக்குதல் இல்லாததால், தானே ஒவ்வொரு முறையும் வெற்றி பெருவதாகிய கற்பனையில் அவன் மகிழ்வான். அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. ஒருநாள் அவ்வாறு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சிலை உடைந்து அவன் மீது விழுந்து அவனை நசுக்கி, அவனுக்கு மரணம் சம்பவிக்கச் செய்தது. அவனுடைய பொறாமைக்கு கிடைத்த சம்பளம் மரணமாகி விட்டது. 

               பதான் அராமில் கி.மு. 1746ல் யாக்கோபு ராகேல் பெற்ற குமாரர்களில் யோசேப்பு மூத்தவன். இவனுடைய  நல்ல குணங்கள் காரணமாக, தந்தை யாக்கோபு,  இவன் மேல் மிக அன்பாய் இருந்தான். இதனால் அவனுடைய சகோதரர்கள் இவன் மேல் பொறாமை கொண்டு தோந்தான் நாட்டிலிருந்து வந்த இஸ்ரவேல் வியாபாரிகளுக்கு அவனை விற்று விட்டார்கள். அந்த வியாபாரிகளோ, யோசேப்பை எகிப்தின் பிரதானியான போத்திபாரிடம் விற்றார்கள். யோசேப்பின் சகோதரர்களுடைய பொறாமை, யோசெப்பைதான் எவ்வளவு துன்புறுத்திவிட்டது! ஆனாலும் கர்த்தர் இருந்தார். அதனால் அவன் எகிப்து தேசத்தின் அதிகாரியாய் அனான்.

                பஞ்ச காலம் வந்த போது கானான் தேசத்திலிருந்து தானியம் பெற எகிப்திற்கு யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள். அங்கே யோசேப்பு அதிகாரியாய் இருந்ததை கண்டு தலைகுனிந்தனர். யோசேப்போ அவர்களை எதிர்க்கவில்லை தன்  சகோதரர்களையும், தன் தகப்பனையும் பார்வோனின் அனுமதியுடன் எகிப்தில் ராமசேஸ் என்கிற இடத்தில் குடியமர்த்தி, சுதந்திரம் கொடுத்து ஆதரித்தான்.
  
                பிறரிடம் நல்ல குணங்கள் அல்லது சம்பத்துக்கள் இருப்பதை கண்டு ஒருவர் தன் உள்ளத்தில் எரிச்சலடைந்து அந்த நபர் மீது பொறாமைபடுகிறார். இது இயற்கையான மனித சுபாவம்தான். ஆனாலும் ஒவொருத்தரும் பொறமை என்னும் பாவகுணத்திற்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார் "சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன். பொறமையோ எலும்புருக்கி" - ( நீதி 14 : 30 )
                                                                                                                                  நன்றி தினகரன் 

                 

05 October 2012

பிறருக்கானவற்றையும் நோக்குவோமாக!

பிறருக்கானவற்றையும் நோக்குவோமாக!


                                                                     டாக்டர் ஜான் 
               ஐடா ஸ்கடர், 20 வயது பெண் 1890ம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி, தன தன் தயார் சுகவீனம் அடைந்த செய்தி கேள்விப்பட்டு அமெரிக்கவிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தாள.திண்டிவனத்தில் இவருடைய பெற்றோர் மிஷனரிகளாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் சொகுசு வாழ்கை இந்தியாவில் ஐடா ஸ்கடருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 1892ம் ஆண்டு வேலூருக்கு மாருதலானார்கள்.

             அங்கு ஒரு இரவில், ஓர் இளம் மனிதன் இவர்களது வீட்டு கதவருகில் நின்று, பிள்ளை பேற்றினால் மரித்துகொண்டிருக்கும் தனது 14 வயது மனைவிக்கு உதவுமாறு ஐடாவை கேட்டுகொண்டார். ஐடா, தன் தகப்பனாரான டாக்டர் ஜான் அவர்களை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாள். அவனோ ஒரு ஆண் டாக்டர் தன் மனைவிக்கு உதவி செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போய்விட்டான்.

             இதேபோல் வேறு இருவர் தம்மனைவியர் பிரசவத்துக்கு உதவுமாறு கேட்க, ஐடா தன் தந்தையை சிபாரிசு செய்ய அவர்கள் மறுத்து, மனகசப்புடன் போனார்கள். அவர்கள் மூவரும் ஐடாவின் மனதைப் பெரிதும் பாதித்தனர். மறுநாள் வீட்டின் ஜன்னல் வழியே ஒரு இறுதி ஊர்வலம் போவதைப் பார்த்தாள். தன்னிடம் உதவி கேட்டவர்களின் மனைவியர் மறித்தனர் என்று அறிந்துகொண்டாள். இந்தியாவில் ஒரு பெண் மருத்துவர் கூட இல்லையே 
என  வேதையுற்று, முகம் குப்புற கட்டிலில் விழுந்து அழுதால். பின்பு தன் பெற்றோரின் அனுமதியோடு அமெரிக்கா சென்று பிலடெல்பியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்று தேவ தரிசனத்தோடு ஒரு மருத்துவராக வேலூர் வந்தால். சிறிது நாளில் தகப்பானார் மரித்துவிட்டார். ஆனாலும் தனது வீட்டின் கிழ் தளத்தில் 10க்கு 12 அடி அறையை திறந்து கிளினிக் ஆரம்பித்தாள். ஆரம்ப நாட்களில் பல பாடுகளை ஐடா ஏற்றுகொள்ள வேண்டிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவளது சேவை வளர்ந்து பெருகியது. 1968 மே மாதம் தன்  90ம் வயதில் திருப்தியாக ஆண்டவருக்கு வேலை செய்துவிட்டு இறுதி மூச்சை விட்டாள்.

             தற்போது இந்த மருத்துவமனை 1300 படுக்கை வசதி கொண்டுள்ளது  14 அறுவை சிகிச்சை தியேட்டரும் ஷெல் கண் மருத்துவமனையும் பல்வேறு பயிற்சி மையங்களும் இருக்கின்றன! இது தான் கிறிஸ்துவின் சிந்தை. நம் நாட்டில் மனம் போன போக்கில் போய்கொண்டிருக்கும் ஜனங்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு நம்மிடம் உள்ளதா?.

   "அவனவன் தனக்கானவற்றையல்ல, பிறருக்கானவற்றையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலி  2: 4-5) 






15 September 2012

சாத்தான் எனும் நடிகன்

சாத்தான் எனும் நடிகன்



            சமீபத்தில் ஹாக்னோஷ் என்ற வகைப் பாம்புகளைக் குறித்து ஒரு பத்திரிகையில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த பாம்புகள் மிகவும் தந்திரமானவை. இவற்றுக்கு விஷம் கிடையாது. இந்த பாம்பு நம்மை கடித்தால் ஒன்றும் ஆகாது. ஆனால் இது தன்னை யாரேனும் தாக்க வரும்போது அவர்களிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள படமெடுத்து சீறி எழுந்து கொத்தபோவது போல வீராப்பாய் பாவனை செய்யும். எதிரி பலசாலியாக இருந்து, தான் படமெடுத்தும் வேஷம் போட்டும் பிரயோஜனமில்லை என்று தெரிய வரும்போது, செத்தது போல் அப்படியே அசையமால் கிடக்கும். பாம்பு செத்துவிட்டது என்று நம்பி எதிரிகள் போன பிறகு, திரும்பவும் நகர்ந்து சென்று தப்பித்துக்கொள்ளும்.
 
               இதைப்போலத்தான் சாத்தானும் மிகவும் தந்திரசாலி. மிகப்பெரிய நடிகன். இவனுக்கு எவ்வித அதிகாரமோ, வல்லமையோ இல்லை. காரணம், இவனை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினாலே ஜெயித்து விட்டார். ஆனாலும் இந்த பிசாசானவன் இன்று நம்மை பயமுறுத்தி, அதிக சக்தி வாய்ந்தவனைப் போல, நம்மை வீழ்த்தி விடுவதைப்போல நடித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு பயந்து நாம், தெருத் தெருவாய், ஊர், ஊராய், மந்திரவதிகளையும் பிசாசு விரட்டுபவர்களையும் தேடி நாடிச் செல்கிறோம்.

                 ஆனால், உண்மையில், பிசாசு செத்துப்போன பாம்பு. அவன் தலையை இயேசு கிறிஸ்து நசுக்கி விட்டார். வால் மாத்திரம் கொஞ்சம் அடிகொண்டிருக்கிறது. இந்த பிசாசுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. "திருடன் (பிசாசு) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான்  10: 10). இந்த திருட்டு பிசாசின் (ஆத்துமாவை திருடுகிறவன்) ஆளுகை ஒரு மனிதனுக்குள் முழுவதுமாக இறங்கி வரும்போது அவன் தன்னையும் மறந்து பிசாசின்  கட்டுபாட்டிற்குள் வந்து விடுகிறான். பல லட்சம் பணம் செலவு செய்தாலும் இந்த பிசாசை சுய முயற்சியினால் விரட்ட முடியாது. அப்படியானால் என்ன செய்வது? " தேவனுக்கு கிழ்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் " என்று ( யாக் 4: 7) வேதம் சொல்கிறது.
                
                  நாம் தேவனுக்கு கிழ்படிந்து அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமக்கப்பட்டு விசுவசிகளாகி, இயேசுவின் பெயரை உச்சரித்து பிசாசை எதிர்க்கும்போது, பிசாசு நடுங்குவான். இயேசுவின் பெயரை உச்சரித்தால் நம்மை விட்டு வெகு தூரம் ஓடிப்போய்விடுவான். 

                                                                                                     தினகரன் ஆன்மிக மலர்     



  

08 September 2012

இயேசு என்ற இராணுவ வீரர்




           இஸ்ரவேலருக்கும் எமோரியரின் ராஜாக்களுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் எமோரியரை இஸ்ரவேலரின் கைகளில் ஒப்புக்கொடுத்தர்கள். ஒப்புகொடுக்கும் அந்த நாளில் யோசுவா, கர்த்தரை நோக்கி பேசி, பின்பு அவரது கட்டளையால் சூரிய சந்திரனுக்கும் தத்தம் இடத்தில் தரித்து நிற்கும்படி ஆணையிட்டார். "சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள். உங்கள் ஒளியினால் நாங்கள் எதிராளிகளை கண்டுபிடித்து அவர்களை அழிப்போம்" என்றார். அதன்படியே மக்கள் தங்கள் எதிராளிகளை முற்றிலுமாக முறியடிக்கும் வரையிலும் சூரியன் மறையாமல் நின்றது. சந்திரனும் அப்படியே நின்றது. இந்த சம்பவத்திற்கு பின்பு பகைவர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்து வரவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விட்டார்கள். இப்படியாக கர்த்தர் ஒரு மனிதனுடைய வார்த்தையை கனம் பண்ணி அவனை உயர்த்தினார். அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னும் பின்னும் இல்லை. கர்த்தரே இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணினார் 

           ஒரு மனிதன் தேவனோடு இருக்கும் போது அவனுக்காக அவர் யுத்தம் பண்ணுகிறார். " அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" - (சங் 33 :9)
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைகலமானவர். அவர் பூமியின் கடை முனை மட்டும் யுத்தங்களை ஓயப் பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார். ரதங்களை நெருப்பினால் சுட்டேரிக்கிறார், நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன் - (சங் 46: 7-10)
என்று வேதம் சொல்லுகிறது.
             தேவன் நம்மை இர்ட்சிக்கும்படி மிகவும் பிரியமாய் இருக்கிறார். இரட்சிப்பு என்றால் காப்பற்றப்படுதல் அல்லது விடுவிக்கப்படுதல். நாம் விடுதலை பெரும்படியாக இயேசு கிறிஸ்து சாத்தானோடு யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்த இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்கும் போது, ஏற்றுகொல்லும்போது, நன்முடைய பாவத்தின் அடிமை தனத்திநின்று நம்மை விடுவிப்பார். நோய்கள், போராட்டங்கள், போன்றவற்றிலிருந்து விடுதலையளிக்கிறார். நமக்காக அவர் யுத்தம் செய்து நம்முடைய வாழ்க்கையில் யெகோவா நிசியாக இருந்து வெற்றிக்கொடி பிடிப்பார். "கர்த்தரை தங்களுக்கு தெய்வமாக கொண்ட ஜாதியும் அவர் தமக்குச் சுதந்திரமாக தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது" - (சங் - 33: 12)
நமக்காக பரிந்து பேச, யுத்தம் செய்ய ஒரு நபர் கூட இல்லையே என்று ஏங்கதீர்கள். உங்களுக்காகப் பரிந்து பேச ஒரு வழக்குரைஞர் உண்டு. அவர் தான் இயேசு. உங்களுக்காக யுத்தம் செய்ய ஒரு இராணுவ வீரர் உண்டு. அவர் தான் இயேசு. அகவே மனிதனுக்கு பயப்படமால் கர்த்தருக்கு பயந்திருங்கள்.                                                                                          


                                                                                                 நன்றி - தினகரன் ஆன்மிக மலர்



கர்த்தருடைய நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் சமாதானமும் சந்தோஷமும் உண்டாவதாக.
                                                                                                           <a href='http://www.tamil10.com' target="_blank" rel="dofollow" > <img src='http://www.tamil10.com/files/newlogo.gif' alt=' Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator '><a href='http://www.tamil10.com' target="_blank" rel="dofollow" > <img src='http://www.tamil10.com/files/newlogo.gif' alt=' Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator '>

05 September 2012

தமிழகத்துக்கு பெருமையா?

தமிழகத்துக்கு பெருமையா?


செய்தி 
                   
                    "தமிழகத்துக்கு வந்த இலங்கை பக்தர்கள் விரட்டியடிப்பு மற்றும் கால் பந்து விளையாட வந்த பள்ளி மாணவர்களும் தமிழக அரசால் திருப்பி அனுப்பப்பட்டனர்"


  கோணம் 

                  தஞ்சாவூர், பூண்டி, வேளாங்கண்ணி மாதா கோயில்களில் வழிபட வந்த பக்தர்களை முற்றுகையிட்டு தாக்க முயன்றுள்ளனர். நாங்களும் தமிழர்கள்தான் 15 வருடங்களாக இந்த கோவிலுக்கு வந்து போய் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதை கேட்க ஆத்திரகாரர்கள் தயாரில்லை இலங்கைளிருந்து வரும் அனைவரும் சிங்களர்கள், சிங்களர்கள் அனைவரும் எதிரிகள் என்று அவர்கள் நம்புகிறார்கள் தவறான விபரீதமான அந்த எண்ணம் உருவாக யார் காரணம்? 

                   சென்னை பள்ளி ஒன்றின் அழைப்பின் பேரில் இங்கே வந்து கால்பந்து போட்டியில் பங்கேற்க பயிற்சி செய்து கொண்டிருந்த இலங்கை பள்ளிகூட மாணவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டார். இன்னொரு கொழும்பு கல்லூரியில் இருந்து சென்னை வந்து சுங்க அதிகாரிகள் குழுவுடன் கால்பந்து போட்டியில் களமிறங்கிய குழுவை திருப்பி அனுப்ப உந்தரவிட்டார். நேரு ஸ்டேடியத்தில் அவர்கள் விளையாட அனுமதித்த அதிகாரியை சஸ்பென்ட் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிட்டுளார். எந்த மாநிலமும் பார்த்திராத அதிரடி நடவடிக்கைகள்.

                     அப்பாவி தமிழர்கள் பலியாக காரணமான இலங்கை அரசையும் ராணுவத்தையும் தண்டிக்கும் கோரிக்கையுடன் தொடங்கிய எதிர்ப்பு வேறு திசையில் திரும்பிருக்கிறது. பள்ளி மாணவர்கள், பக்தர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து மக்களையும் எதிரிகளாக பாவித்து, நிராயுதபாணிகளான அவர்களை தாக்கவும் துரத்தி அடிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்த சரியான சந்தர்ப்பம் வந்து விட்டது என்று கட்சி கொடிகளையும் கற்களையும் கைகளிலேந்தி வீதியில் இறங்கிவிட்டார்கள்.

                      இந்தியாவில் நாசவேலைகள் செய்து அப்பாவிகளை பலியாக்கும் பாகிஸ்தான், இந்திய மண்ணில் கணிசமான பகுதியையை ஆக்கிரமித்துள்ள சீனா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்குகூட இத்தகைய வரவேற்பு கொடுப்பதில்லை. அரசின் செயல்களுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. அந்த விஷயத்தில் நம்மை போன்றுதான் இதர நாடுகளும், அதே மாதிரி ஒரு அநீதி இன்னொரு அநீதியை நியாயமாக்கி விடாது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த உண்மைகளை அறிந்து அலட்சியப் படுத்தினால் நமது நாடு பெரிய விலை கொடுக்க நேரிடும். 

                                                                                                                             --  நன்றி: தினகரன் 

என் எண்ணம்  
          
                       வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இன்று விரட்டியடிக்கும் நாடக மாறியிருக்கிறது காரணம் நம் தமிழ்மக்கள் அங்கு சித்திரவதை பட்டுகொண்டிருக்கும் போது அந்த நாட்டை சார்ந்த மக்கள் இங்கு வந்து போவதை நம்மால் தங்கிக்கொள்ள முடியவில்லை. மக்களின் உணர்ச்சி கலந்த நிலையில் பார்க்கும் போது இது சரியாக தோன்றலாம் அனால், மனித நேயத்துடன் பார்க்கும் போது இது தவறான போக்காகும். நம் தமிழ் நாட்டை சார்ந்த எந்தனையோ வியாபாரிகள் அங்கே சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். நம்மை போன்று அவர்களும் நம்மவர்களை தாக்க தொடங்கினால் என்னாவது என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு செல்லும் நம் நாட்டு தலைவர்கள் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமதிக்கப் படுகிறார்கள் அப்போது நாம் கண்டன கணைகளை விட்டு அதோடு மறந்து விடுகிறோம். அந்த நாட்டு மக்களை நாம் எதுவும் செய்யவில்லை, அதேபோல் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்து எட்டு இந்தியர்கள் கொள்ளப்பட்டு விட்ட போதும் அந்த நாட்டுடன் நாம் சண்டை போடமால் கண்டனம் தெரிவித்து விட்டுவிட்டோம். இது போன்ற விஷயங்களில் உணர்ச்சிகளை வெளி காட்டமால்  மனிதபிமனாத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டு சித்திரவதை பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய பாதுகாப்பும் இதில் அடங்கிருக்கிறது. அதலால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து அரசாங்கமும் இது போன்ற செயல்களை உக்குவிக்கமால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்று படுவோம் தமிழீழம் கிடக்க பாடுபடுவோம். 

01 September 2012

பாக்கியம் தரும் பரமனின் பரீட்சை

வழி காட்டும் கிறிஸ்துவம் 




பாக்கியம் தரும் பரமனின் பரீட்சை 

                  ஊத்ஸ் என்ற நாட்டில் யோபு என்னும் ஒரு பெரிய பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பத்து பிள்ளைகள், ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐந்நூறு ஏர்மாடுகள், ஐந்நூறு கழுதைகள், மற்றும் திரளான வேலையாட்கள் இருந்தார்கள். ஆனாலும் அவர் உத்தமனனாய், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். தேவன் அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் பாதுகாத்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோபுவினுடைய வாழ்க்கையில் புயல் காற்று 
வீசியது. காரணம் யார் தெரியுமா? பொறாமையின் எஜெண்டாகிய பிசாசுதான். ஆம், ஒரு நாள் பிசாசு தேவனிடம் வந்து அவனுக்குண்டான எல்லாவற்றையும் அழிக்கும்படி அனுமதி கேட்டான். எப்படிபட்ட சூழ்நிலை வந்தாலும் யோபு தன்னை மறுதலிக்க மாட்டான் என்று தேவன் அறிந்த படியால் சவால் விட்டு அனுமதி வழங்கினார்.

                    உடனே யோபுவின் பிள்ளைகள், ஆடுகள், ஒட்டகங்கள், ஏர் மாடுகள், கழுதைகள், வேலைக்காரர்கள் என அடுத்தடுத்து எல்லாம் அழிந்து போய்விட்டது. யோபு கொஞ்சமும் கலங்கவில்லை. "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லி அவர் புகழ் பாடினான். பின்னும் ஒருநாள் சாத்தான் தேவனிடத்தில் வந்து "நீர் உம்முடைய கையை நீட்டி அவன் எலும்பையும் அவன் மம்சத்தையும் தொடுவீரானால் அவன் உம்மை தூஷிப்பான், குறை சொல்லுவான்" என்றான் தேவனும் "அவன் உயிரை பறிக்க உனக்கு அதிகாரமில்லை: ஆனால் அவன் சரீரத்தை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். அவன் என்னை மறுதலிக்க மாட்டான்" என்று சவால் விட்டார்.
                      உடனே சாத்தான், யோபுவுக்கு உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை வரை கொடிய பருக்கள் கொண்டு வந்தான். யோபு என்ன நடக்கிறது என்று அறியாமல் ஒரு ஓட்டை எடுத்து தன்னை சுரண்டிகொண்டே சாம்பலில் உட்கர்ந்திதிருந்தான். இதை பார்த்த யோபுவின் மனைவி தேவனை தூஷித்து ஜீவனை விடும் படி ஆலோசனை கூறினால்.

                       யோபு தன் மனைவியை பார்த்து "தேவன் கையிலே நன்மையை பெற்ற நாம், தீமையையும் பெற வேண்டாமா?" என்றான். ஒருபுறம் மனைவியின் வார்த்தைகள், இன்னொரு புறம் தன் நண்பர்களின் கேலி பேச்சுகள், இவை மதத்திலும் யோபு தேவனை தூஷிக்கவில்லை. மாறாக தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தார். அப்போது தேவன் யோபுவின் முகத்தை பார்த்தார். அவன் நிலைமையை மாற்றினார். அவனுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாக திருப்பிக் கொடுத்தார். நாலு தலைமுறையாக தன் பிள்ளைகளையும், அவர்களுடைய வம்சவாழியினர் வாழ்வையும் கண்டு பூரண வயது நிரம்பியவானாய் சமாதானத்தோடே நித்திரையடைந்தான் யோபு.

                        சோதனைகள் அதாவது பரீட்ச்சைகள், நம்மை புடம் போடவே, நம்மை உயர்த்தவே இறைவனால் அளிக்கப்படுகின்றன. வாழ்கைப் பரீட்சையில் வெற்றி பெற தேவனை சர்ந்துகொள்வோம். குறை கூறாதிருபோம். இப்படி இருந்தால், நம்மைக் குறித்து தேவன் பிசாசிடம் சவால் விடுவார். 

                                                                                                   "பரமன்குறிச்சி பெவிஸ்டன்"   



   

30 August 2012

செய்தியின் கோணமும் என் எண்ணமும்


செய்தி
            "பாகிஸ்தான் திவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை உறுதி"
               
                                                                                    உச்சநீதி மன்றம் தீர்ப்பு



கோணம் 
                 
                   2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற தீவிரவாத சம்பவத்தை நேரடியாக பார்த்தோம் அதில் 166 பேர் மரணம் அடைந்தர்கள் 238 பேர் படுகாயம் அடைந்தனர் ஒன்றுமே அறியாத இத்தனை பேர் மரணத்துக்கு பாகிஸ்தானில் இருந்து உடுருவிய ஒன்பது தீவிரவாதிகள் கரணம் அதில் எட்டு பேர் நம்முடைய காவல் துறையால் சுடப்பட்டு உரிழந்தனர். அதில் உயிருடன் பிடிபட்டவன் அஜ்மல் கசாப் அவனுக்குத்தான் உச்சநீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதி படுத்திருகிறது. அவனுக்காக நீதி மன்றமே ஒரு வக்கீலை அமர்த்தி அந்த வழக்கை 2008 முதல்  2012 ஆகஸ்ட் மாதம் வரை நான்கு வருடங்களில்  இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஜனநாயக நடவடிக்கையை உலகமே வியந்து பாராட்டுகிறது. இங்கு ஜனநாயகம் மேலோங்கி நிற்கிறது.

என் எண்ணம்  
                   
                   இதே வேகத்தில் புரட்சி தலைவி அம்மா (வாய்தா வாங்குவதில் புரட்சி) அவர்களின் சொத்து குவிப்பு வழக்கு நடந்திருந்தால் !!!!!!!!!!!!!!!!!! பதினைந்து வருடமாக நடந்து கொண்டிருக்கிறது நடந்தும் முடிந்த பாடில்லை  
                                                                     
                                                         இங்கு இந்திய ஜனநாயகம் ???????????.
                                                                                                   
                                                                                                           தா








29 August 2012

ஒரு புதிய உதயம்

ப்ளாக் தோழர்களே ஒரு புதிய உதயமாக"அன்பு"புதிய பதிவுகளுடன் வருகிறேன் உங்களில் ஒருவனாய் உங்கள் எண்ண பதிவுகளின் ஒருவனாக என்னை ஏற்று உங்களில் ஒருவனாக என்னை சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி வணக்கம். 

ஹலோ

 
  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துக்கள்