18 March 2013

நறுமணம் பெற ஒரு மனதாயிருப்போம்



     ஒருநாள் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து வயிற்றோடு சண்டையிட்டன "நீ மட்டும் எந்த வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகிறாய். ஆகவே இனிமேல் நாங்களும் எந்த வேலையும் செய்யபோவதில்லை" என வயிற்றிடம் சொல்லிவிட்டன. அன்று முதல் கால் உணவை தேடி செல்லவில்லை. கை உணவை எடுக்கவில்லை, வாய் சாப்பிடவில்லை. ஆனால் வயிறு இதைகுறித்து கவலைப்படவே இல்லை. நாட்கள் செல்ல செல்ல உடல் உறுப்புகள் எல்லாம் பலம் இழந்து போயின. உண்மையை அறிந்து கொண்ட உறுப்புகள் வயிற்றிடம் வந்து மன்னிப்பு கோரி அன்று முதல் ஒற்றுமையாய் வாழ ஆரம்பித்தன; பழைய வலிமையைவிட பல மடங்கு புது வலிமை பெற்றன.

     நமக்கு ஒரே சாரீரத்திலே அனேக அவயங்கள் இருந்தும் எல்லா அவையங்களும் ஒரே தொழில் இராதது போல், அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சாரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயங்கலகயிருக்கிறோம் (ரோமர் 12: 4,5). ஆதி சபையில், "விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார், ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். வீடுகள் தோறும் அப்பம் சுட்டு விநியோகித்து மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள்" என்று வேதம் சொல்லுகிறது.

     இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் ஒற்றுமை வலிமையிழந்து வருகிறது. இப்படி பட்ட சூழ்நிலையில் தேவன் நம்மிடம் எதிபார்ப்பது ஒற்றுமை! நாம் எல்லோரும் ஒவ்வொரு உறுப்பாய் காணப்டுகிறோம். எல்லா உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டல்தானே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக இயங்கும்? பணக்காரநென்றும் ஏழை யொன்றுமில்லை. உயர்ந்தவநென்றும் தாந்தவநென்றும்மில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்- ஒரே உடம்பின் பல உறுப்புக்கள் போல. சகோதரரே, நீங்கள் யாவரும் ஒரே காரியத்தை பேசவும் பிரிவினைகளில்லாமால் ஏகமனதும் ஏக யோசனையும் உள்ளவர்களாய். சீர் பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வேண்டி கொள்கிறேன். (2கொரி  13: 11). நீங்களெல்லோரும் ஒருமனப்ட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும் சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்க்களுமாய் இருங்கள்" ( 1 பேதுரு 3: 8)

No comments:

Post a Comment