03 February 2013

இச்சையான பார்வையும் ஒரு பாவமே




    இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே என்ற தம் பக்தன் மூலம் 10 கட்டளைகள் தேவன் கொடுத்தார். அக்கட்டளைகளில் ஒன்று விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது விபச்சாரம் செய்யதிருப்பயாக என்ற வார்த்தை வேதாகமத்தில் யாத் 20: 14, உபா 5:27, மத் 5:27, மத் 19:18,  ரோமர் 13:9, ஆகிய வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. விபச்சாரம் பண்ணுகிறவன் மதி கேட்டவன். அப்படி செய்கிறவன் தன் ஆத்துமாவை கேடுத்து போடுகிறான் நீதி 6:32 வேதம் கூறுகிறது. மேலும் 1 கொரிந்தியர் 6:9,10 வசனங்களில் வேசி மர்கத்தாரும், விபச்சரகரரும், சுயபுனர்சிகாரரும் ஆண் புனர்சிகாரருமே  தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று காணப்படுகிறது. தன் மனைவியை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால் அவன் விபச்சரக்காரன் என்று இயேசு சொன்னார் என்பதை மத் 19:9, லூக்கா 18:20 போன்ற வசனங்களில் வாசிக்கலாம். மேலும் எது விபச்சாரம் என்பதையும் இயேசு கிறிஸ்து தெளிவாய் விளக்கியுள்ளார். "நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று" (  மத் 5:28 ).

    இக் கலக்கட்டத்தில் உலகெங்கும் விபச்சாரம், வேசித்தனம் தலைவிரித்தடுகிறது. ஒவொரு நாளும் பாலியல் வன்கொடுமை செய்திகளை கேள்விபடுகிறோம். பெரு நகர எல்லைகளில் விபச்சரகரர்களின் வாடிக்கையாளர்கள் கூட்டம் பெருகி கொண்டிருக்கிறது. "விபச்சரியானவள்அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்" ( நீதி 6:26) வேதம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டு காலங்களில் விபச்சாரம் செய்தால் தான் பாவம் என்று இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலோ அப்படியல்ல. ஒரு ஆணையோ, பெண்ணையோ இச்சையோடு பார்த்தாலே அது பாவமாக கருதப்படும் சுய ஒழுக்கம் குன்றி, பிறன் மனை நோக்குவோர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர், அக் குற்றம் செய்யும் முன் சிந்திப்பதில்லை; செய்தபின் மனம் வருந்தியும் எந்த பயனும்மில்லை; விலை மதிக்க முடியாத நஷ்டத்தை ஏற்படுத்தியாகிவிட்டது; அதற்கப்புறம் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது. அந்த புலம்பலும் போலியோ என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா? அப்படிப்பட்ட பாவத்தில் விழுந்து தவித்து கொண்டிருப்போருக்கு தேவன் தரும் ஆலோசனை "வேதமே வெளிச்சம். போதக சிட்சையே ஜீவ வழி. அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும் இச்சகம் பேசும் நாவுடைய பரஸ்திரிக்கும் விலக்கி காக்கும் ( நீதி 6:23,24) இந்த வசனத்தில் 'ஸ்திரி என்னும் வரும் இடங்களில் 'ஆண் ' என்று சேர்த்துகொள்ளலாம். 
    விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு அரசு எப்படிப்பட்ட தண்டனை வழங்கினாலும் பரலோக அரசின் தண்டனைக்கு முன் இவை சதரனமனவையே. "விபச்சாரகாரன் வாதையையும், இலச்சையையும் அடைவான் அவன் நிந்தை ஒழியாது" (நீதி 6:33) என்று வேதம் கூறுகிறது. விபச்சாரம் செய்வது மட்டுமல்ல. இச்சையான பார்வையும் விபசார பாவமே.         



No comments:

Post a Comment