05 October 2012

பிறருக்கானவற்றையும் நோக்குவோமாக!

பிறருக்கானவற்றையும் நோக்குவோமாக!


                                                                     டாக்டர் ஜான் 
               ஐடா ஸ்கடர், 20 வயது பெண் 1890ம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி, தன தன் தயார் சுகவீனம் அடைந்த செய்தி கேள்விப்பட்டு அமெரிக்கவிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தாள.திண்டிவனத்தில் இவருடைய பெற்றோர் மிஷனரிகளாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் சொகுசு வாழ்கை இந்தியாவில் ஐடா ஸ்கடருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 1892ம் ஆண்டு வேலூருக்கு மாருதலானார்கள்.

             அங்கு ஒரு இரவில், ஓர் இளம் மனிதன் இவர்களது வீட்டு கதவருகில் நின்று, பிள்ளை பேற்றினால் மரித்துகொண்டிருக்கும் தனது 14 வயது மனைவிக்கு உதவுமாறு ஐடாவை கேட்டுகொண்டார். ஐடா, தன் தகப்பனாரான டாக்டர் ஜான் அவர்களை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாள். அவனோ ஒரு ஆண் டாக்டர் தன் மனைவிக்கு உதவி செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போய்விட்டான்.

             இதேபோல் வேறு இருவர் தம்மனைவியர் பிரசவத்துக்கு உதவுமாறு கேட்க, ஐடா தன் தந்தையை சிபாரிசு செய்ய அவர்கள் மறுத்து, மனகசப்புடன் போனார்கள். அவர்கள் மூவரும் ஐடாவின் மனதைப் பெரிதும் பாதித்தனர். மறுநாள் வீட்டின் ஜன்னல் வழியே ஒரு இறுதி ஊர்வலம் போவதைப் பார்த்தாள். தன்னிடம் உதவி கேட்டவர்களின் மனைவியர் மறித்தனர் என்று அறிந்துகொண்டாள். இந்தியாவில் ஒரு பெண் மருத்துவர் கூட இல்லையே 
என  வேதையுற்று, முகம் குப்புற கட்டிலில் விழுந்து அழுதால். பின்பு தன் பெற்றோரின் அனுமதியோடு அமெரிக்கா சென்று பிலடெல்பியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்று தேவ தரிசனத்தோடு ஒரு மருத்துவராக வேலூர் வந்தால். சிறிது நாளில் தகப்பானார் மரித்துவிட்டார். ஆனாலும் தனது வீட்டின் கிழ் தளத்தில் 10க்கு 12 அடி அறையை திறந்து கிளினிக் ஆரம்பித்தாள். ஆரம்ப நாட்களில் பல பாடுகளை ஐடா ஏற்றுகொள்ள வேண்டிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவளது சேவை வளர்ந்து பெருகியது. 1968 மே மாதம் தன்  90ம் வயதில் திருப்தியாக ஆண்டவருக்கு வேலை செய்துவிட்டு இறுதி மூச்சை விட்டாள்.

             தற்போது இந்த மருத்துவமனை 1300 படுக்கை வசதி கொண்டுள்ளது  14 அறுவை சிகிச்சை தியேட்டரும் ஷெல் கண் மருத்துவமனையும் பல்வேறு பயிற்சி மையங்களும் இருக்கின்றன! இது தான் கிறிஸ்துவின் சிந்தை. நம் நாட்டில் மனம் போன போக்கில் போய்கொண்டிருக்கும் ஜனங்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு நம்மிடம் உள்ளதா?.

   "அவனவன் தனக்கானவற்றையல்ல, பிறருக்கானவற்றையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலி  2: 4-5) 






No comments:

Post a Comment